ஆப்நகரம்

வட்டி உயர்வு முதல் பங்குச் சந்தை வரை.. பொருளாதார ஆய்வறிக்கை பாசிட்டிவ்!

நிதி நிலை, பணக் கொள்கை, பங்குச் சந்தைகள் குறித்து பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 31 Jan 2023, 5:23 pm
மத்திய பட்ஜெட் அறிக்கை நாளை (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி, நிதி நிலை, தொழில்துறை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கண்ணோட்டத்தை பொருளாதார ஆய்வறிக்கை தருகிறது.
Samayam Tamil stock market
stock market


இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் நிதிப் பற்றாக்குறை பற்றிய விவரங்களும் வெளியாகியுள்ளது. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

நிதிப் பற்றாக்குறை 2019-20ஆம் நிதியாண்டில் 4.7% ஆகவும், 2020-21ஆம் நிதியாண்டில் 9.2% ஆகவும், 2021-22ஆம் நிதியாண்டில் 6.7% ஆகவும், 2022-23ஆம் நிதியாண்டில் 6.4% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Economic Survey: பணவீக்கம் இப்போ எப்படி இருக்கு? பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது இதுதான்!
நிதிநிலை மேம்பாடுகளை பொறுத்தவரை, பொருளாதார ஆய்வறிகை கூறும் தகவல்கள் பின்வருமாறு,

  • 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு எட்டவிருக்கிறது.

  • வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலையாக உள்ளது.

  • மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.

  • அரசின் மூலதன செலவுகள் (ஜிடிபி விகிதத்தில்) அதிகரித்து வருகிறது.

  • இந்தியாவின் கடன்கள் நடுத்தரமாக உயர்ந்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு:

நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 563 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2019-20ஆம் நிதியாண்டில் 478 பில்லியன் டாலராகவும், 2020-21ஆம் நிதியாண்டில் 577 பில்லியன் டாலராகவும், 2021-22ஆம் நிதியாண்டில் 607 பில்லியன் டாலராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணக் கொள்கை மற்றும் பங்குச் சந்தை:

  • ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மொத்தம் 2.25% உயர்த்தியுள்ளது.

  • வட்டி விகிதம் உயர்வின் விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

  • மொத்த வாராக் கடன்களின் (GNPA) விகிதம் ஏழு ஆண்டு சரிவில் 5% ஆக உள்ளது.

  • உணவு சாரா கடன் வளர்ச்சி ஏப்ரல் மாதம் முதல் இரட்டை இலக்க விகிதத்தில் உள்ளது.

  • 10 ஆண்டு அரசு பத்திரத்தின் முதிர்வு நிலையாக உள்ளது.

  • வெளிநாட்டு முதலீடுகள் (FPI) வெளியேற்றத்தை சமாளிக்கும் சக்தியாக உள்நாட்டு முதலீடுகள் (DII) செயல்பட்டுள்ளன.

  • மற்ற நாடுகளை விட இந்திய பங்குச் சந்தைகள் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் - டிசம்பர்) சிறப்பாக செயல்பட்டுள்ளன.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்