ஆப்நகரம்

சிறு நிறுவனங்களுக்கு சிறப்புக் கடன்: கால அவகாசம் நீட்டிப்பு!

அவசரகாலக் கடன் திட்டம் 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2022, 2:25 pm
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருமானம் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு தரப்பிலிருந்து emergency credit line guarantee scheme என்ற அவசரகாலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil msme


இதன்படி வங்கிகள் தரப்பிலிருந்து சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

சிறு குறு தொழில்முனைவோர்கள் அதிகபட்சமாக ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை இத்திட்டத்தில் கடன் வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான கால அவகாசம் 2023 மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கிரிப்டோ முதலீட்டாளர்களை வஞ்சித்த நிர்மலா சீதாராமன்?
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், கோடிக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்