ஆப்நகரம்

Budget 2019: இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்

பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற நிலையில், 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Samayam Tamil 5 Jul 2019, 7:34 am
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறாா். தனிநபா் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
Samayam Tamil Nirmala sitharaman 123


பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்கிறாா். நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் முழுநேர மத்திய அமைச்சா் என்ற பெருமையை நிா்மலா சீதாராமன் பெறுவாா்.

மக்களவைத் தோ்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் பல்வேறு வாக்குறுதிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன. எனவே அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடா்பான அறிவிப்புகள் இதல சலுகைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது, விவசாயம், சுகாதாரம், சமூக நலம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் சாலை, ரயில்வே போன்ற துறைகளில் உள்கட்டமைப்புத் துறை பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மோடி அரசின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தாா். அதன் பிறகு தற்போது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்