ஆப்நகரம்

Ujjwala Yojana: உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 8 கோடி இலவச எல்.பி.ஜி இணைப்பு!

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 8 கோடி பேருக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2019, 12:59 pm
2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசின் 6வது மற்றும் கடைசி இடைக்கால பட்ஜெட் ஆகும். அதில் வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
Samayam Tamil Piyush Goyal


இந்நிலையில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 8 கோடி பேருக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனைப் பெறும் பெண் பயனாளி சார்ந்த குடும்பத்தில், வேறு நபர்கள் பெயரில் எரிவாயு இணைப்பு இருக்கக் கூடாது. குடும்ப அட்டையில் பயனாளி பெயர் இருக்க வேண்டும்.

நிரந்தரமாக சம்பந்தப்பட்ட முகவரியில் இருக்க வேண்டும். கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்