ஆப்நகரம்

இது ஒரு தேர்தல் பட்ஜெட்; வரும் மக்களவை தேர்தலில் விளைவுகள் தெரியும்: மன்மோகன்சிங்!

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வரும் மக்களவை தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 3:59 pm
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் ஆனது. இதனை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
Samayam Tamil Manmohan Singh


இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் வரும் தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், சிறு விவசாயிகள், நகர்ப்புற மக்கள் ஆகியோருக்கு சலுகைகளை வாரி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய முக்கியமான சோதனையாகும்.

இதனை தேர்தல் பட்ஜெட் என்று தான் சொல்ல வேண்டும். இதன் விளைவுகள் வரும் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும். இடைக்கால பட்ஜெட்டிற்கான செலவீனத்தை சரியாகக் கணக்கிடாமல் மத்திய அரசு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்