ஆப்நகரம்

மத்திய பட்ஜெட்: சிறு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?

சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை மத்திய பட்ஜெட்டில் சலுகை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2022, 2:01 pm
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது. கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த பட்ஜெட்களைப்போலவே இந்த பட்ஜெட் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அதற்கெல்லாம் நிவாரணம் வழங்கும் வகையில் இந்த பட்ஜெட் இருக்குமா என்ற கேள்வி உள்ளது.
Samayam Tamil msme


பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பல்வேறு துறைகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையும் தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கொரோனா முதலிரண்டு அலைகளால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த சிறு நிறுவனங்கள் துறை இப்போதுதான் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பத் தொடங்கியுள்ளது. அதன் வளர்ச்சியை மீட்டெடுக்க மத்திய பட்ஜெட்டில் சில சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பட்ஜெட் 2022: இந்த முறையாவது கிடைக்குமா? முதலீட்டாளர்களின் பெரும் எதிர்பார்ப்பு!
கடந்த முறை அறிவிக்கப்பட்ட அவசர காலக் கடன் திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் எனவும், சிறு குறு நிறுவனங்களுக்கு தங்கு தடையில்லாமல் கடனுதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் அத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். சிறு நிறுவனங்கள் துறையை மீட்டெடுக்க ஊக்கத்தொகை திட்டம் வேண்டும் எனவும் கோரிக்கை வந்துள்ளது. கொரோனா காலத்தில் சிறு நிறுவனங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. சில கணக்குகள் செயல்படா சொத்துகளாக முடங்கின. இந்த விஷயத்திலும் நிவாரணம் தேவை என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்