ஆப்நகரம்

சர்வதேச அளவில் விளையாட்டில் இந்தியா பதக்கங்களை குவிக்க புதிய வாரியம்: பட்ஜெட்டில் தகவல்

விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Jul 2019, 12:52 pm
இந்தியாவைப் பொருத்த வரையில் கிரிக்கெட் விளையாட்டு மட்டும் மிக அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. உலகக் கோப்பையில் ஜொலிக்கின்றது. மற்றபடி பேட்மிண்டன், கபடி போட்டிகளில் இந்திய விளையாட்டுத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
Samayam Tamil Nirmala Sitharaman


ஆனால் இந்த விளையாட்டு வளர்ச்சி மட்டும் இந்திய அணிக்கு சர்வதேச அரங்கில் அதிக பதக்கங்களை பெற்றுத் தராது என்பதால், இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக புதிய தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாரியம்:
இந்திய விளையாட்டுத் துறையை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.

Budget Live Updates: விவசாயிகள் மேம்பாட்டிற்கு 10,000 புதிய அமைப்புகள் - நிர்மலா சீதாராமன் அதிரடி!

இந்த வாரியத்தில் அந்தந்த விளையாட்டில் பிரபல வீரர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளைப் படைத்த வீரர்கள் பயிற்சி தரும் வகையில் இருக்கும் என்றும், இதனால் இந்தியா சர்வதேச அரங்கில் பதக்கங்களையும், கோப்பைகளையும் வெல்ல வாய்ப்பாக அமையும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2019 தாக்கலின் போது தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்