ஆப்நகரம்

கிரிப்டோ முதலீட்டாளர்களை வஞ்சித்த நிர்மலா சீதாராமன்?

இந்தியாவில் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமான நாணயமாக மாறிவிட்டதா?

Samayam Tamil 1 Feb 2022, 2:01 pm
மத்திய பட்ஜெட்டில், கிரிப்டோகரன்சிக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். 2022-23 நிதியாண்டுக்கான தனது பட்ஜெட் உரையில், மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். "விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளின் பரிவர்த்தனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் பதிவுகள் ஆகியவற்றின் மூலம் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் மீது குறிப்பிட்ட வரி விதிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று சீதாராமன் கூறினார்.
Samayam Tamil crypto nirmala


மேலும் டிஜிட்டல் சொத்துகளை வாங்குதல், விற்றல் போன்ற பரிமாற்றங்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் சட்டபூர்வமானதாக அறியப்படுகிறது. அதுமட்டுமின்றி கிரிப்டோகரன்சிகளை மற்றவர்களுக்கு பரிசாக அளித்தாலோ அல்லது விரிச்சுவல் சொத்துகளால் ஏற்படும் இழப்பிற்கும் கையகப்படுத்தும் செலவைத் தவிர மற்றவைகளுக்கு எந்தவொரு வரி விலக்குகளும் அளிக்கப்படாது எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சிக்கு 30 சதவீத வரி.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
சொத்துகள் மற்றும் முதலீடுகள் மீதான வரிகளில், கிரிப்டோகரன்சிகளுக்கு வரையறுக்கப்பட்ட வரி விகிதம் அதிகமாக உள்ளதால் அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறியலாம். கிரிப்டோகரன்சிகள் மீதான அதிகப்படியான வரி விதிப்பு கிரிப்டோ முதலீட்டாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்