ஆப்நகரம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஐஸ் வைத்த பட்ஜெட்

சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்ட வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகியவற்னொறின் வாக்காளர்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2018, 4:49 pm
சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்ட வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகியவற்னொறின் வாக்காளர்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil northeast states were targeted by the 2018 budget
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஐஸ் வைத்த பட்ஜெட்


மேகாலயா, திரிபுரா, நாகால்ந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் முனைப்பாகவே இருந்து வருகிறது பாஜக.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு மாநில மக்கள் கோரிக்கையை ஏற்று மரம் வகைகளில் இருந்து மூங்கிலுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு. இதனால் மூங்கில்களை வனத்துறை அனுமதி இல்லாமல் வெட்டி விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவானது.
தற்போது பட்ஜெட்டிலும் விவசாயிகள் நலன் என்ற பெயரில் ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற வாக்காளர்களைக் கவருவதற்கான ஆயுதமாக பட்ஜெட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநில மக்களைக் கவருவதற்காக மூங்கில் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1,290 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்கு மாநில கிராமப்புற மக்களை இலக்கு வைத்தே அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்