ஆப்நகரம்

பட்ஜெட் 2022: மிடில் கிளாஸ் மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு!

வரும் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய எதிர்பார்ப்பு இதுதான்.

Samayam Tamil 18 Jan 2022, 4:16 pm
இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில்தான் இருப்பார்கள் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
Samayam Tamil Home Loan


இப்படி நகரங்களில் வேலைவாய்ப்புகள், தொழில் நிமித்தமாக குவியும் மக்களால் அங்கு வீடுகளுக்கும் டிமாண்ட் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகளவில் வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். 35 வயதுக்குட்பட்டவர்களில் ஏராளமானோர் வீட்டுக் கடன் வாங்குகின்றனர்.

வீட்டுக் கடன்களின் வளர்ச்சிக்கு 26 முதல் 35 வயது வரம்பிலானவர்களே முக்கிய பங்காற்றுகின்றனர். வீட்டுக் கடன் தொகையின் சராசரி அளவு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. வீட்டுக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.

பட்ஜெட் 2022: வீட்டுக் கடன் வாங்கியோருக்கு சலுகை!
நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் வீட்டுக் கடன் தொகை அளவு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சம்பளம் பெறும் நபர்கள், மிடில் கிளாஸ் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதே வீடு விற்பனை, வீட்டுக் கடன் உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 11 முதல் 30 ஆண்டுகள் வரை உள்ளது. மேலும், வீட்டுக் கடன் EMI கட்டணமும் நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் இல்லை. எனவே, வீட்டுக் கடன் வாங்கிய நபர்கள் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வீட்டுக் கடன் வாங்கியோருக்கு பட்ஜெட்டில் நிவாரணமும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென நிபுணர்களும், தொழில்துறையினரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்