ஆப்நகரம்

பெண்கள் சுயநிதி உதவி குழுவில் இனி ரூ. 1 லட்சம் வரை கடன்!!

சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதியுதவி பெறும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

Samayam Tamil 5 Jul 2019, 1:44 pm
நிதியமைச்சர் அவர் தனது பட்ஜெட் உரையில், ''பெனகலின் பங்களிப்பால் தான் நாட்டை உயர்த்த முடியும். அவர்களது பங்களிப்பு அவசியமாக உள்ளது. ஆண்களுக்கு இணையாக அவர்களும் வாக்களித்து உள்ளனர். இதுவரை அவர்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது இனி ரூ. ஒரு லட்சம் என்று உயர்த்தப்படும்.
Samayam Tamil Nirmala 2


அவையில் பெண் எம்.பி.,களின் எண்ணிக்கையும் 78 ஆக உள்ளது. கிராமப்புற பொருளாதாரம் பெண்களால் வளர்ச்சி பெறுகிறது. இந்த ஒரு லட்சம் முத்ரா திட்டத்தி கீழ் வழங்கப்படும். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்'' என்றார்.

நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இதற்கென்று சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்களின் அத்தியாவசிய தேவைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் இந்த திட்டத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி அரசால் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில் இருந்தே இந்த திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், தற்போது இந்த தொகையை சிறிது அதிகரித்து கொடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்