அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
ஏழைப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள், கிராமம், நகர்ப்புறம் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜெட்லி சலுகைகள் அறிவித்துள்ளார்.
* 76 சதவீத வங்கி கடன் கணக்கு பெண்களுடையதாக இருக்கிறது. இதில் 50 சதவீத பெண்கள் எஸ்சி, எஸ்டி மாற்றும் ஓபிசி-யை சேர்ந்தவர்கள். இதை மனதில் வைத்து ரூ. 3 லட்சம் கோடி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு வழங்க தேர்தலை முன்னிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 5 கோடி இலவச வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச காஸ் வழங்கும் பிரதமர் மோடியின் திட்டம் ஏழை மற்றும் கிராமப்புற, நகர்ப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று பட்ஜெட்டை பாராட்டிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
* சுய நிதி உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் கடன் 37 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 75,000கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் இதுவரை தங்களது ஈபிஎப் திட்டத்திற்கு 12 சதவீதம் தங்களது வருமானத்தில் இருந்து செலுத்தி வந்தனர். இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு 12 சதவீதம் செலுத்தும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள், கிராமம், நகர்ப்புறம் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜெட்லி சலுகைகள் அறிவித்துள்ளார்.
* 76 சதவீத வங்கி கடன் கணக்கு பெண்களுடையதாக இருக்கிறது. இதில் 50 சதவீத பெண்கள் எஸ்சி, எஸ்டி மாற்றும் ஓபிசி-யை சேர்ந்தவர்கள். இதை மனதில் வைத்து ரூ. 3 லட்சம் கோடி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு வழங்க தேர்தலை முன்னிட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
* தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 5 கோடி இலவச வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இது தற்போது 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச காஸ் வழங்கும் பிரதமர் மோடியின் திட்டம் ஏழை மற்றும் கிராமப்புற, நகர்ப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று பட்ஜெட்டை பாராட்டிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
* சுய நிதி உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் கடன் 37 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ. 75,000கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் இதுவரை தங்களது ஈபிஎப் திட்டத்திற்கு 12 சதவீதம் தங்களது வருமானத்தில் இருந்து செலுத்தி வந்தனர். இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு 12 சதவீதம் செலுத்தும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த குறைப்பு செய்யப்பட்டுள்ளது.