ஆப்நகரம்

இது வேற மாரி பட்ஜெட்.. இந்திய வரலாற்றில் முதல்முறையாக.. அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்திய வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா வடிவில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக பிரத்யேக மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்களும் பயன்படுத்தலாம்.

Samayam Tamil 24 Jan 2021, 5:27 pm
பட்ஜெட் ஆவணங்கள் தயார் செய்யப்படுவதை குறிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 23) அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Samayam Tamil Union Budget App


பிப்ரவரி 1ஆம் தேதியன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத முறையில் இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதாக தெரிகிறது. அதாவது, 2021-22 பட்ஜெட் அறிக்கை காகிதமில்லா வடிவில் (Paperless form) தாக்கல் செய்யப்படும் என் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அல்வா விருந்து நிகழ்ச்சிக்கு பின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது. மாறாக, டிஜிட்டல் முறையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும்.

இதற்காக ‘Union Budget Mobile App'என்ற மொபைல் ஆப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மொபைலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பட்ஜெட் ஆவணங்களை பார்க்கலாம்.

இந்த மொபைல் ஆப்பை தேசிய தகவலியல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதை டவுன்லோட் செய்யலாம். ஆண்ட்ராய்ட் போன், ஐபோன், ஐபேட் ஆகியவற்றில் இந்த ஆப்பை பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்