ஆப்நகரம்

இன்சூரன்ஸ் சட்டம் திருத்தப்படும்.. இதனால் என்ன பயன்?

அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த காப்பீட்டுச் சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2021, 12:25 pm
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை ஆற்றிவருகிறார். இதில், காப்பீட்டுச் சட்டம் 1938இல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil Insurance Law


காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு தற்போது 49 விழுக்காடாக இருக்கிறது. இதை 74 விழுக்காடாக உயர்த்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Vehicle Scrappage Policy என்றால் என்ன? இதனால் என்ன பயன்?
மேலும், காப்பீட்டு துறையில் வெளிநாட்டவர்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். புதிய அமைப்பில், காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டுமென நிர்மலா அறிவித்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் 50% இயக்குநர்களாவது சுதந்திர இயக்குநர்களாக இருக்க வேண்டுமெனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வுக்கு காப்பீட்டு தொழில்துறையில் வரவேற்பு அளித்துள்ளனர்.

முதலீட்டு வரம்பு உயர்வால் காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் நிதி திரட்ட முடியுமெனவும், தொழில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும் காப்பீட்டு தொழில்துறையினர் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்