ஆப்நகரம்

Farmers Budget 2019: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்ன கிடைக்கப்போகிறது?

அண்மையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பேச்சின் மூலம் பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கான ஒதுக்கீடு பற்றி முன்கூட்டியே தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Samayam Tamil 28 Jan 2019, 4:59 pm

ஹைலைட்ஸ்:

  • பயிர்க் கடனுக்கான வட்டி தள்ளுபடி, வங்கிக் கணக்கில் பணம், புதிய காப்பீடு
  • 2019 மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கவர்ச்சிகர அறிவிப்புகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 57304
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளைக் கவரும் வகையில் இடம்பெற உள்ள பல்வேறு திட்டங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்தியில் தற்போதைய பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடராக அமைகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான விளைபொருட்களுக்கு குறைவான விலையே கிடைப்பதாலும், கடன் நெருக்கடியாலும் தவிக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை மத்திய அரசு இந்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பேச்சின் மூலம் பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கான ஒதுக்கீடு பற்றி முன்கூட்டியே தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், குறித்த காலத்தில் பயிர்க் கடனை அடைக்கும் விவசாயிகளுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

பயிர்க் கடனுக்கான பிரீமியம் தொகையை முழுமையாக ரத்து செய்யும் பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு பரிசிலீப்பதாகத் தெரிகிறது. இத்திட்டத்தை ஏற்கெனவே தெலுங்கானா மற்றும் ஒரிசா மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

நீண்ட காலத் திட்டங்களை அறிவித்தால் அவற்றை செயல்படுத்த முடியாமல் போகலாம் என்பதால் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும். அவற்றை செயல்படுத்துவதன் மூலம் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் ஆதாயம் அடைய முயலும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் கண்ட சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மத்திய அரசு விவசாயிகள் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது எனக் கூறலாம்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்