ஆப்நகரம்

முதல் முறையாகக் கடன் வாங்கும் 10 கோடிப் பேர்!

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடிப் பேர் முதல் முறையாகக் கடன் வாங்குவதற்கு விண்ணப்பிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Samayam Tamil 26 Apr 2021, 5:16 pm
வங்கிகளில் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் இப்போதெல்லாம் கடன் வழங்கவே வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. அதுவும் முதல் முறையாக வங்கிக்குச் சென்று கடன் கேட்கும்போது அந்த நபரின் கடன் வரலாறு பற்றித் தெரியாது என்பதால் அதுகுறித்து வங்கிகள் ஆலோசிக்கின்றன. அப்போது கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. முதல் முறையாகக் கடன் வாங்க வருபவர் அதை எவ்வாறு திருப்பிச் செலுத்துவார்; சரியாகக் கடனை அடைத்துவிடுவாரா போன்ற சந்தேகங்கள் இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சில கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கடன் மதிப்பீட்டைக் கணிக்கின்றன.
Samayam Tamil loan


டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் சார்பாக, முதல் முறை வாடிக்கையாளரின் கடன் மதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 101 முதல் 200 வரை மதிப்பெண் இருந்தால் அந்த வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்சினை இருக்காது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஆண்டில் சுமார் 10 கோடிப் பேர் முதல் முறையாகக் கடன் வாங்க விண்ணப்பிப்பதாகத் தெரியவந்துள்ளது. அதுவும், 26 முதல் 35 வயதுடையவர்களில் சுமார் 25 சதவீதத்தினர் முதல் முறை கடன் வாங்க விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆய்வானது 2019 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வீடு கட்ட ரூ.2.67 லட்சம் மானியம் கிடைக்கும்... இது தெரியாம போச்சே!
25 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 24 சதவீதத்தினரும், 36 முதல் 45 வயதுடையவர்களில் 20 சதவீதத்தினரும், 46 முதல் 55 வயதுடையவர்களில் 13 சதவீதத்தினரும், 55 வயதுடையவர்களில் 8 சதவீதத்தினரும் முதல் முறை கடன் வாங்க விண்ணப்பிக்கின்றனர். கடன் வாங்குவதற்கான தேவையைப் பொறுத்தவரையில், 46 சதவீதத்தினர் இருசக்கர வாகனம் வாங்குவதற்காகவும், 28 சதவீதத்தினர் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும், 25 சதவீதத்தினர் வீட்டுக் கடன் வாங்கவும் விண்ணப்பிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்