ஆப்நகரம்

​பெண்களுக்கு இலவசமாக வரும் 1000 ரூபாய்.. வாங்குவது எப்படி?​

இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 8 Mar 2023, 7:21 am
​அரசிடமிருந்து பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு விண்ணப்பித்து வாங்குவது என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil 1000 rupees given free to women under this scheme check how to apply
​பெண்களுக்கு இலவசமாக வரும் 1000 ரூபாய்.. வாங்குவது எப்படி?​


1000 ரூபாய்!

​நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அதில் பெண்களுக்கு அரசிடம் இருந்து மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். இதன் பெயர் லட்லி பஹ்னா யோஜனா. இதுபோன்ற நிறைய திட்டங்களை பெண்களுக்கான அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் பரிசு கிடைக்கும். இத்திட்டம் குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


பெண்களுக்கான சிறப்பு திட்டம்!

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். பெண்களுக்காக 'லாட்லி பஹ்னா யோஜனா' திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள் அதிக பயன் பெறுவார்கள். இத்திட்டம் பெண்களை வலுவாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் குடும்பத்தை நடத்துவது எளிதாகும்.


லட்லி பஹ்னா யோஜனா என்றால் என்ன?

​மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானால் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. எந்த உதவியும் இல்லாமல் கிடைக்கும் தொகையில் பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தலாம். பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலம் உள்ள பெண்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பெண்களை முன்னேற்றவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


யாரெல்லாம் பயன்பெறலாம்?

1. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
​2. வயது 23 வயதுக்குக் குறையாமலும் 60 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
​3. பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைக்காது.
​4. இந்த சிறப்புத் திட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.


தேவையான ஆவணங்கள்!​

​1. ஆதார் அட்டை
​2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
​3. வங்கிக் கணக்கு விவரங்கள்
​4. மொபைல் நம்பர்
​5. குடியிருப்புச் சான்றிதழ்
​6. பிறப்புச் சான்றிதழ்


எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு, அரசு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து வருகிறது. அங்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்