ஆப்நகரம்

10ஆவது படித்தாலே போதும்... சம்பாதிக்க அருமையான வழி!

10ஆவது படித்திருந்தாலே ஆயிரங்களில் சம்பாதிக்கும் வேலையை எல்ஐசி நிறுவனம் வழங்குகிறது. எப்படி அதில் இணைவது என்று பார்க்கலாம்.

Samayam Tamil 17 Dec 2020, 5:12 pm
கொரோனா வந்த பிறகு இந்தியாவில் வேலையின்மைப் பிரச்சினை அதிகரித்துவிட்டது. பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அப்படி இருக்கையில் வெறும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நல்ல சம்பளம் வாங்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கொரோனா போன்ற பேரழிவுக்குப் பிறகு நிறையப் பேர் காப்பீடு செய்யத் தொடங்கியுள்ளனர். எனவே எல் ஐ சி நிறுவனத்தில் ஏஜெண்ட் பணிக்கு அதிக தேவை இருக்கிறது. இந்த வேலை கிடைக்க என்ன தகுதி, என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.
Samayam Tamil lic


எல்ஐசி ஏஜெண்ட் ஆவதற்கு கட்டாயம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு அவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

அருகில் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் கிளைக்குச் சென்று அங்கு இருக்கும் டெவலெப்மெண்ட் ஆஃபீசரை சந்திக்க வேண்டும்.

பிராஞ்ச் மேனேசர் உங்களை இண்டர்வியூ செய்து, நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவர் என்று கருதினால் உங்களை அவர் டிரைனிங் செண்டருக்கு அனுப்புவார்.

இந்த டிரைனிங் சுமார் 25 மணி நேரங்களுக்கு நடைபெறும். ஆயுள் காப்பீட்டின் அனைத்து வகையான அம்சங்கள் மற்றும் விவரங்கள் குறித்து அந்த டிரைனிங்கில் உங்களுக்குக் கற்றுத் தரப்படும்.

இந்த டிரைனிங் முடிந்த பிறகு IRDAI அமைப்பு சார்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வில் பங்கேற்று பாஸ் ஆக வேண்டும்.

இந்தத் தேர்வில் பாஸ் ஆனவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மற்றும் ஐடி கார்டு தரப்படும். அதன் பின்னர் உங்களுக்கு போஸ்டிங் வழங்கப்படும்.

இந்த வேலைக்கான ஆவணங்களைப் பொறுத்தவரையில், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 10ஆம் வகுப்பு மார்க் ஷீட், டிரைவிங் லைசன்ஸ், ஆதார் கார்டு, பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகிய ஆவணங்கள் தேவை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்