ஆப்நகரம்

ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு கெடு!

வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு அரசு கெடு வழங்கியுள்ளது.

Samayam Tamil 14 Jun 2022, 3:15 pm
உணவுகளை ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இந்தியர்களிடையே இப்போது அதிகமாகிவிட்டது. இந்த வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் சமைக்கக் கூட நேரம் இல்லாமல் ஆர்டர் செய்த சாப்பாட்டை மட்டுமே சாப்பிட்டு நிறையப் பேர் உயிர்வாழ்கின்றனர். அந்த அளவுக்கு நகர்ப்புறங்களில் மிகவும் இன்றியமையாத ஒரு தேவையாக இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் மாறிவிட்டன.
Samayam Tamil swiggy


உணவு டெலிவரி என்றாலே ஸ்விகி, ஜொமாட்டோ ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இப்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்குப் போட்டியாக நிறைய நிறுவனங்கள் வந்துவிட்டாலும் அதிகப் பேரால் விரும்பி பயன்படுத்தப்படுவது இவையிரண்டும்தான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நிறையப் பேரிடம் இந்த ஆப்கள் இருக்கும்.

இந்த ஆப்கள் மூலமாக நிறையப் பேர் உணவு ஆர்டர் செய்து வாங்கினாலும் இது தொடர்பான புகார்களும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றனர். டெலிவரி செய்யும் பணியாளர்கள் சிலர் தவறாக நடந்துகொள்வதாகவும், தவறாகப் பேசுவதாகவும் புகார்கள் உள்ளன. அதேபோல, சரியான நேரத்தில் டெலிவரி செய்வதில்லை, மெத்தனமாக நடந்துகொள்வது போன்ற புகார்களும் அடிக்கடி வருகின்றன.

இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஸ்விகி மீது 3,631 புகார்களும், ஜொமாட்டோ மீது 2,828 புகார்களும் வந்துள்ளன. இந்நிலையில், ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு விஷயத்தில் 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்