ஆப்நகரம்

விமான எரிபொருளுக்கு ஜிஎஸ்டி.. மத்திய அரசு முடிவு?

ஜிஎஸ்டியின் கீழ் விமான எரிபொருளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 22 Feb 2022, 2:28 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்ற புதிய வரி முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் கீழ் நான்கு அடுக்குகளின் கீழ் அனைத்து பொருட்களும் சேவைகளும் வகைப்படுத்தப்பட்டன. ஆனால், பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அதிக வருவாய் தரும் இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவந்தால் மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.
Samayam Tamil gst


ஆனால், பொதுமக்கள் தரப்பிலிருந்து பார்த்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து உயர்ந்து வருவதால் இவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவந்தால் சுமை குறையும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, விமான எரிபொருளையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. விமான எரிபொருள் விலையேற்றத்தில் விமான நிறுவனங்களுக்கு இழப்பு அதிகரிப்பதால் அதன் சுமையை விமான டிக்கெட் போன்றவற்றின் மூலமாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது.

வரலாறு காணாத விலையேற்றம்.. டிக்கெட் விலை உயரும் அபாயம்!
இதுபோன்ற நிலையில், விமான எரிபொருளை ஜிஎஸ்டியின் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு பார்முலாவை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டால் விரைவில் விமான எரிபொருள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும். விமான எரிபொருளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் விமான நிறுவனங்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கும் இது பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்