ஆப்நகரம்

பிட் காயினுக்கு தனியாக ஏடிஎம் நிறுவியவர் கைது, இயந்திரம் பறிமுதல்!

பிட்காயினுக்கு தனியாக ஏடிஎம் துவங்கியவர் கைது செய்யப்பட்டார். அவர் நிறுவிய ஏடிஎம் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 24 Oct 2018, 1:18 pm
பிட்காயினுக்கு தனியாக ஏடிஎம் துவங்கியவர் கைது செய்யப்பட்டார். அவர் நிறுவிய ஏடிஎம் இயந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil Bitcoin ATM


விர்ச்சுவல் கரண்சி எனப்படும பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையில் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது. மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால்,10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கையில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரெண்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது எனு்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இது போன்ற கிரப்டோ கரண்சி வைத்திருப்பவர்கள், பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

இதனிடையே, இந்தியாவில் முதன்முதலாக கிரிப்டோ கரண்சிகளுக்காக தனியாக ஏடிஎம் துவங்கப்பட்டது. பெங்களுருவில் உள்ள கெம்ப் ஃபேராட் மாலில் துவங்கப்பட்ட இந்த ஏடிஎம் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களது யூசர் ஐடி-யைப் பயன்படுத்தி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில், சட்டவிரோதமாக துவங்கப்பட்டுள்ள இந்த பிட்காயின் ஏடிஎம் மையத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பிட் காயினுக்கு இந்தியாவில் தடை இருக்கும் நிலையில், பிட் காயினுக்காகவே பிரத்யேகமாக ஏடிஎம் மையத்தை நிறுவியதாக ஹரிஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் யூஎன்ஓ காயின் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். மேலும், ஹரிஷிடம் இருந்து ஏடிஎம் மிஷின், இரண்டு லேப்டாப், மொபைல்கள், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு, பாஸ்போர்ட், யூஎன்ஓ முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், கிரிப்டோ கரெண்சி டிவைஸ், 1.8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்