ஆப்நகரம்

சொத்து வரி வசூல்.. பெருநகர சென்னை மாநகராட்சி சாதனை!

கடந்த 2022-23 நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி ரூ.2000 கோடிக்கு மேல் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 16 Apr 2023, 12:48 pm
பெருநகர சென்னை மாநகராட்சி 2022-23 நிதியாண்டில் சொத்து வரி வசூலில் சாதனை படைத்துள்ளது. மொத்தம் ரூ. 2,044 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் சொத்து வரியாக மட்டும் ரூ. 1,522.86 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai


2023 ஏப்ரல் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ரூ. 285.38 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், தேனாம்பேட்டை மண்டலம் அதிகபட்சமாக ரூ. 61.84 கோடியும், அடையாறு மண்டலம் ரூ. 41.19 கோடியும் வசூல் செய்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம் அதிக வசூலை பதிவு செய்த நிலையில், மணலி மற்றும் திருவொற்றியூரில் முறையே குறைந்த அளவாக ரூ. 3.25 கோடி மற்றும் ரூ. 4.84 கோடி வசூலாகியுள்ளது. அபராதம் இன்றி சொத்து வரி வசூலிப்பதற்கான கடைசி நாளான ஏப்ரல் 15ஆம் தேதியில் தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் ரூ. 9.86 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மக்களிடம் வரி வசூல் செய்ய சிறப்பு முகாம்களை நடத்தியது. 2.56 லட்சம் சொத்து உரிமையாளர்கள் ஏப்ரல் 6 வரை வரி செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர். தற்போதைய வரி வசூல் விவரங்கள், திருத்தப்பட்ட சொத்து வரியுடன் கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச வரி வசூலாக இருக்கலாம் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. சனிக்கிழமை மட்டும் பெருநகர சென்னை மாநாகராட்சி 44.72 கோடி வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துப் பதிவு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்கள் 34.41 லட்சம் பத்திரங்களை பதிவு செய்து ரூ. 17,296 கோடி வசூல் செய்துள்ளன. இதில் சென்னையில் மட்டும் 63 பத்திரப் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 7,727 கோடி வருவாய் கிடைத்துள்ளது. செக்யூரிட்டீஸ் துறையின் மொத்த வருமானத்தில் 44 சதவீதம் சென்னையிலிருந்து மட்டும் கிடைத்துள்ளது.

பத்திரப் பதிவுகளின் இந்த வளர்ச்சி குறிப்பிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர், திருப்பத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த நிதியாண்டில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையின் முக்கிய இடங்களில் நிலத்தின் விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினர் குன்றத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அதிகப் பேர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால், வீடு, நிலம் வாங்கும் போக்கு எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்