ஆப்நகரம்

1 கோடி ரூபாய் சம்பளம்.. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

ஐடிசி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 12:15 pm
ஐடிசி நிறுவனம் (ITC) 2021-22ஆம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2022ஆம் நிதியாண்டில் ஐடிசி நிறுவனத்தில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெற்றவர்களின் எண்ணிக்கை 44% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil salary


ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021ஆம் நிதியாண்டில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 153 மட்டுமே. ஆனால், 2022ஆம் நிதியாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது.

2022ஆம் நிதியாண்டில் 102 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது என ஐடிசி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்கள் மாதம் குறைந்தபட்சம் 8.5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் சம்பளம் பெற்றுள்ளதாக ஐடிசி கூறுகிறது.

ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ்.. ரோல்ஸ் ராய்ஸ் அடடே அறிவிப்பு!
ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சிவ் பூரி 2022ஆம் நிதியாண்டில் 12.59 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவருக்கான மொத்த சம்பளம் 5.35% உயர்ந்துள்ளது. இதில் அவரது சம்பளத்தொகை 2.64 கோடி ரூபாய், இதர பலன்கள் 49.63 லட்சம் ரூபாய், போனஸ் தொகை 7.52 கோடி ரூபாய் ஆகியவை அடங்கும். 2021ஆம் நிதியாண்டில் சஞ்சீவ் பூரி 11.95 கோடி ரூபாய் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் நிதியாண்டில் ஐடிசி நிறுவனத்தின் தலைமை இயக்குநர்கள் பி.சுமந்த், ஆர்.டண்டன் ஆகியோர் 5.76 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளனர். மற்றொரு தலைமை இயக்குநரான ஆனந்த் 5.60 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்