ஆப்நகரம்

தாராளமயமாக்கல்: 30 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

இந்தியாவில் தாராளமயமாக்கல் அமலுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் நோக்கம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

Samayam Tamil 22 Jan 2021, 8:01 pm
தாராளமயமாக்கல் என்பது பொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாகும். அந்நிய முதலீடுகளை ஆதரிப்பது, அரசு நிறுவனங்களைத் தனியாரிடம் வழங்குவது, முதலீடுகளை ஈர்க்க வரிகளைக் குறைப்பது போன்ற அம்சங்கள் அடங்கும். 1991ஆம் ஆண்டில் இந்தியாவில் தாராளமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதைக் கொண்டுவந்ததன் நோக்கம் சரியாக நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது.
Samayam Tamil lib


தாராளமயம் அமலுக்கு வந்தபோது பொருளாதாரம் அதிவேகமாக வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும், மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கூறப்பட்டது. நீரின் அளவு உயர்ந்தால் அதில் மிதக்கும் படகுகளும் உயரும் என்று கூறுவது போல, பொருளாதாரம் உயரும் போது அதைச் சார்ந்த அம்சங்களும் உயரும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் தற்போதைய நிலையில் அப்படி எதுவும் உயரவில்லை என்று பொருளாதார வல்லுநரான ஜெ.ஜெயரஞ்சன் கூறுகிறார். உதாரணமாக மக்களுக்கான வேலைவாய்ப்புகள் கவலைக்கிடமாக உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது. சரியான சம்பளமும் நிலையான வேலை இல்லாமலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

நிலையான வேலை, தேவையான சம்பளம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையை நடத்தி முன்னேறிச் செல்ல முடியும். அது தற்போதைய சூழலில் நிரந்தரமற்றதாகவே இருக்கிறது. தொழிலாளர் சட்டங்களும் இவர்களைப் பாதுகாக்கும் வகையில் இல்லை. தாராளமயமாக்கலால் வேலைவாய்ப்புகளும், வாழ்வாதாரமும் மேம்படாத நிலையில் அதன் நோக்கம் நிறைவேறியதாகக் கூறமுடியாது. பொருளாதார வளர்ச்சி 9-10 சதவீதமாக இருந்தால்கூட அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் நாட்டு மக்களின் வாழ்வாதாரமும் உயர வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலையில் இந்தியா தத்தளிக்கிறது. கொரோனா வந்தபிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

தொழிலாளர் நலனைக் காக்க அரசின் கொள்கைகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்