ஆப்நகரம்

3000 பேருக்கு வேலை காலி.. மோர்கன் ஸ்டான்லி அதிரடி முடிவு!

அடுத்த ஆறு மாதங்களில் 3000 பேரை வேலையை விட்டு நீக்க மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 May 2023, 5:10 pm
பணி நீக்கம் என்பது கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நிறையப் பேர் அச்சத்தில் உள்ளனர்.
Samayam Tamil layoff


ஆட்டோமொபைல், ஐடி, டிஜிட்டல் என பல்வேறு துறைகளில் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி தனது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை மொத்தம் 3000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தப் பணி நீக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழல்கள் சரியில்லாத காரணத்தாலும், போதிய அளவில் ஒப்பந்தங்கள் கிடைக்காததாலும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காக நிறுவனங்கள் பணி நீக்கத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் ஒரே அடியாக 3000 பேர் என்பது பெரிய எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேம்ஸ் கோர்மன் சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்திலேயே பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த முறை பெரிய அளவில் பணி நீக்கங்கள் இருக்கும் என்று அவர் கூறினார். அதன்படி தற்போது 3000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளில் உள்ள பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட உள்ளனர். எந்த இடத்தில் எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் தற்போது 82,000 பேருக்கு மேல் வேலை பார்க்கின்றனர். அதில் சுமார் 4 சதவீத ஊழியர்களுக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்