ரிசர்வ் வங்கியின் பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பிய 30,000 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் (Liberalised Remittance Schemeதாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டமும் ) ஒன்று. இத்திட்டம் 2004ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டது. அப்போது தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக 25,000 டாலர் பணத்தை அனுப்பலாம். அதன் பின்னர் பல்வேறு கட்டங்களாக இத்திட்டத்தின் கீழ் அனுப்பும் பணத்தின் வரம்பு உயர்த்தப்பட்டது.
Gold Rate: தங்கம் விலை குறையாது போலயே... தீபாவளிக்கு எப்படி வாங்குறது..?
தற்போது இத்திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 2.50 லட்சம் டாலர் பணத்தை வெளிநாடுகளில் உள்ள கணக்குகளில் சேமித்து வைக்கலாம். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களிலும் மற்ற செலவுகளுக்கும் இப்பணம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் ரிசர்வ் வங்கியும் வருமான வரித் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!
வெளிநாட்டுக்கு அனுப்பும் பணத்தில் முறைகேடுகள் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, இப்பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம் என்று சென்ற ஆண்டில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 25,000 டாலருக்குக் குறைவான சிறிய பரிவர்த்தனைகளுக்குக் கூட இது கட்டாயமாக்கப்பட்டது.
நம்புங்க... இந்தியப் பொருளாதாரம் கண்டிப்பா வளரும்!
இத்திட்டத்தின் கீழ் பணம் அனுப்பிய 30,000 பேர் தற்போது வருமான வரித் துறையின் விசாரணை வலையில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனுப்பிய பணம் எங்கிருந்து கிடைத்தது; அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்கும்படி அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொய்க்கணக்கு காட்டி மரண அடி வாங்கிய இன்ஃபோசிஸ்!
வரி ஏய்ப்புக்கு ஏதுவாக உள்ள தெற்காசிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு இங்கிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் வருமான வரித் துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
Gold Rate: தங்கம் விலை குறையாது போலயே... தீபாவளிக்கு எப்படி வாங்குறது..?
தற்போது இத்திட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 2.50 லட்சம் டாலர் பணத்தை வெளிநாடுகளில் உள்ள கணக்குகளில் சேமித்து வைக்கலாம். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களிலும் மற்ற செலவுகளுக்கும் இப்பணம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் ரிசர்வ் வங்கியும் வருமான வரித் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
ரூ.1.54 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை!
வெளிநாட்டுக்கு அனுப்பும் பணத்தில் முறைகேடுகள் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, இப்பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம் என்று சென்ற ஆண்டில் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 25,000 டாலருக்குக் குறைவான சிறிய பரிவர்த்தனைகளுக்குக் கூட இது கட்டாயமாக்கப்பட்டது.
நம்புங்க... இந்தியப் பொருளாதாரம் கண்டிப்பா வளரும்!
இத்திட்டத்தின் கீழ் பணம் அனுப்பிய 30,000 பேர் தற்போது வருமான வரித் துறையின் விசாரணை வலையில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனுப்பிய பணம் எங்கிருந்து கிடைத்தது; அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கின் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்கும்படி அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொய்க்கணக்கு காட்டி மரண அடி வாங்கிய இன்ஃபோசிஸ்!
வரி ஏய்ப்புக்கு ஏதுவாக உள்ள தெற்காசிய நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு இங்கிருந்து பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் வருமான வரித் துறை விசாரணையில் இறங்கியுள்ளது.