ஆப்நகரம்

36000 குடும்பங்கள் ஹேப்பி.. சென்னையில் வீடு வாங்கியோர் நிம்மதி!

சென்னை உள்ளிட்ட ஏழு பெரு நகரங்களில் நிலுவையில் இருந்த 36,830 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2022, 2:50 pm
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு பெரு நகரங்களில் தாமதமான அல்லது கட்டி முடிக்கப்படாமல் இருந்த சுமார் 36,830 வீடுகள் கடந்த ஐந்து மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அனராக் (Anarock) நிறுவனம் வெளியிட்டுள்ள ரிப்போர்ட் கூறுகிறது.
Samayam Tamil properties


கடந்த ஜனவரி மாதம் ஒமைக்ரான் பரவலால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதால் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தது.

எனவே, இந்த ஆண்டு தொடங்கியது முதல் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக இல்லை. இருப்பினும், ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களில் சென்னை உள்ளிட்ட ஏழு பெரு நகரங்களில் தாமதமான அல்லது கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த 36,830 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளதாக அனராக் ரிப்போர்ட் கூறுகிறது.

பங்குகள் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. எது சிறந்த முதலீடு?
இதில் அதிகபட்சமாக தேசிய தலைநகர் பகுதியில் 2,57,360 வீடுகள் மே மாத இறுதி வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி தேசிய தலைநகர் பகுதி, புனே ஆகிய ஏழு நகரங்களில் இன்னும் 4,79,940 வீடுகள் நிலுவையில் உள்ளன.

இந்த வீடுகளின் மதிப்பு மட்டும் 4,48,129 கோடி ரூபாய்க்கு மேல். இதில் டெல்லிக்கும், மும்பைக்கும் மட்டும் 77% பங்கு உள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய தென்னிந்திய பெருநகரங்களுக்கு 9% பங்கு உள்ளது. புனேவிற்கு 9%, கொல்கத்தாவுக்கு 5% பங்கு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்