ஆப்நகரம்

எஸ்பிஐ உடன் 5 துணை வங்கிகள் இணைப்பு!

பாரத் ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணைவங்கிகள் இன்று இணைந்துள்ளனர்.

TNN 1 Apr 2017, 7:45 pm
டெல்லி : பாரத் ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணைவங்கிகள் இன்று இணைந்துள்ளனர்.
Samayam Tamil 5 associates merge with sbi
எஸ்பிஐ உடன் 5 துணை வங்கிகள் இணைப்பு!



நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், பாட்டியாலா மற்றும் ஐதராபாத் ஆகிய துணை வங்கிகளை தன்னுடன் ஒருங்கிணைக்க முடிவு செய்தது..

இதற்கு, மத்திய அமைச்சரவை மற்றும் எஸ்பிஐ முதலீட்டாளர்கள், இயக்குனர்கள் குழு, ரிசர்வ் வங்கி என அனைவரது ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.இதையடுத்து இன்று முதல் இந்த 5 துணை வங்கிகள் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடங்கியுள்ளது.இதையடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் உள்ள திருவாங்கூர் வங்கியின் முகப்பு பலகைகள் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.

துணை வங்கிகளின் ஊழியர்கள், எஸ்பிஐ ஊழியர்களாகக் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலமாக, சர்வதேச அளவில் முன்னணி வங்கிகளில் ஒன்றாக எஸ்பிஐ மாறியுள்ளது. அதன் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாகவும், 22, 500 கிளை அலுவலகங்கள், 58,000 ஏடிஎம் மையங்கள் என எஸ்பிஐயின் சேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

5 associates merge with sbi

அடுத்த செய்தி

டிரெண்டிங்