ஆப்நகரம்

50% சம்பளம் கட்: பஜாஜ் ஆட்டோ அதிரடி!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தனது ஊழியர்களுக்குக் கண்டிப்பாக 50 சதவீதம் சம்பளம் குறைக்கப்படும் என்று பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2020, 6:59 pm
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார வீழ்ச்சியும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்பட்டுள்ளது. கொரோனா விளைவாகத் தங்களது வருவாயை இழந்துள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, பணிநீக்கம், சம்பளக் குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, புதிய பணியமர்த்தல் நிறுத்தி வைப்பு எனப் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுள்ளன. குறிப்பாக ஐடி துறையிலும் ஆட்டோமொபைல் துறையிலும் இப்பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன.
Samayam Tamil bajaj


ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே வருவாய் இழப்பு, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் செலவுகளைக் குறைக்கும் வகையில் பணிநீக்க நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலைமை சற்று மேம்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பால் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த நான்கு மாதங்களாகவே வாகன விற்பனை முற்றிலும் முடங்கிவிட்டது.

பல கோடிகளை அள்ளிப்போட்ட ஃப்ளிப்கார்ட்... என்னதான் திட்டம்?

இந்நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அவுரங்காபாத் நகரத்தில் உள்ள வாலுஜ் ஆலையில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரையில் குறைக்க முடிவுசெய்துள்ளது. அவுரங்காபாத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வாறு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அவுரங்காபாத் ஆலையை இழுத்து மூடவேண்டியிருக்கும். அவ்வாறு ஆலை மூடப்பட்டால் கட்டாயம் 50 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி: மோடி சொல்வது உண்மையா?

அவுரங்காபாத்தில் ஜூலை 10 முதல் 18 வரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. சம்பளக் குறைப்பு அறிவிக்கப்பட்டாலும், ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பணிக்கு வந்த ஊழியர்களுக்கும், ஊரடங்குக்கு பின்னர் முதல் நாளில் வேலைக்கு வந்த ஊழியர்களுக்கும் எஞ்சிய 50 சதவீத சம்பளம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பளக் குறைப்பானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவசரகால வேலைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்