ஆப்நகரம்

சம்பளம் இல்லாத விடுப்பு: ஊழியர்களை விரட்டும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியாவின் ஊதியம் இல்லா விடுப்புத் திட்டத்தின் கீழ் 59 பேர் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Sep 2020, 8:16 pm
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக, நீண்ட காலமாகவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் சுமையைக் குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது, ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது. இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தனது ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப முடிவு செய்தது.
Samayam Tamil air india


ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விரைவில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதால், எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ள ஏர் இந்தியாவின் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்புவதற்கான அதிகாரம் ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்டது. ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பிஎஃப் திட்டத்தில் இத்தனை பேரா? என்ன காரணம்?

இந்நிலையில், சம்பளம் இல்லா விடுப்புத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 59 ஊழியர்கள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், ஏர் இந்தியாவில் 58 பேர், அலையன்ஸ் ஏர் ஏவியேசன் நிறுவனத்தில் ஒருவர் என மொத்தம் 59 பேர் இத்திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக் கூறினார். ஊழியர்களின் உடல் நலம், திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டு அவர்கள் ஊதியம் இல்லா விடுப்பில் அனுப்பப்படுகின்றனர்.

ஜூலை 14ஆம் தேதி இதற்கான உத்தரவை ஏர் இந்தியா வெளியிட்டிருந்தது என்பதும், ஏர் இந்தியாவுக்கு ரூ.70,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்