ஆப்நகரம்

5ஜி ஏலம்.. அனல் பறக்கும் போட்டி.. அள்ளப்போவது யார்?

இன்று நடைபெறும் 5ஜி ஏலத்தின் 38ஆவது சுற்றில் என்ன நடக்கிறது? முழு விவரம்.

Samayam Tamil 1 Aug 2022, 2:24 pm
இந்தியாவின் முதல் 5ஜி ஏலம் ஏழாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் மிக தீவிர போட்டியில் இறங்கியுள்ளன.
Samayam Tamil 5g


நேற்று வரை 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இன்று உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதிக்கான 1800 Mhz ஸ்பெக்ட்ரத்திற்கு ஏலம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆறு நாட்களாக 1,50,130 கோடி ரூபாய்க்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையாகியுள்ளது. தற்போது 38ஆவது சுற்று ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த லக்னோ, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், கான்பூர் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு வந்துள்ளது.

வருமான வரி.. கால அவகாசம் குறைப்பு.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு!
இப்பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் 1800 Mhz. கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் சுமார் 10 கோடிக்கு மேற்பட்ட மொபைல் பயனாளிகள் உள்ளனர். இத்தகைய முக்கிய மண்டலத்துக்கு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றன.

கிழக்கு உத்தரப் பிரதேசம் மீது டெலிகாம் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. எனவேதான் இப்பகுதிக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்பட்ட 91 கோடி ரூபாயில் (ஒரு Mhzக்கு) இருந்து 160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்