ஆப்நகரம்

வெங்காயம் விலையைக் குறைக்க 7,000 டன் இறக்குமதி!

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த 7,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 7:21 pm
வெங்காயத்துக்கான தட்டுப்பாடு காரணமாக
Samayam Tamil onion

இந்தியாவில் வெங்காயத்தின் விலை தற்போது பெரும் விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் வெங்காய இறக்குமதி அதிகரித்து சந்தையில் வெங்காய விநியோகம் உயர்ந்துள்ளது. தற்போது வரையில் இந்தியா மொத்தம் 7,000 டன் அளவிலான வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளதாகவும், இன்னும் 25,000 டன் அளவு வெங்காயம் தீபாவளிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் எனவும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அனைத்தும் தனியார் துறை வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நஃபெட் நிறுவனம் அடுத்த கட்ட இறக்குமதியை மேற்கொள்ளும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். வெங்காயம் மட்டுமல்லாமல், உருளைக் கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. பூட்டானிலிருந்து 30,000 டன் அளவு உருளைக் கிழங்கை இந்தியா இறக்குமதி செய்கிறது. அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் கடந்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.65 என்ற நிலையில் நீடிக்கிறது.

போனஸ், பதவி உயர்வு எப்போது? காக்னிசண்ட் அறிவிப்பு!

இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அதேவேளையில், வெங்காய ஏற்றுமதியையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. எகிப்து, ஆஃப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து தற்போது வெங்காயம் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி தாண்டி, உள்நாட்டில் பதுக்கலைக் கட்டுப்படுத்த, ஸ்டாக் இருப்பு விதிமுறைகளையும் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. உருளைக் கிழங்கைப் பொறுத்தவரையில், அரசின் நடவடிக்கைகளால் உருளைக் கிழங்கின் விலை தற்போது கிலோவுக்கு 42 ரூபாயாக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்