ஆப்நகரம்

அகவிலைப்படி நிலுவைத்தொகைக்கு பிரச்சினை.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 28 Feb 2022, 3:35 pm
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கெனவே அகவிலைப்படி நிலுவைத் தொகைக்காக பல வாரங்களாக காத்திருக்கின்றனர். முதலில், அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரே தவணையில் மொத்தமாக செலுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
Samayam Tamil cash


இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது. இந்நிலையில், அகவிலைப்படி நிலுவைத் தொகை இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். இச்செய்தி அரசு ஊழியர்களுக்கு தலைவலி ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால் உடனடியாக அகவிலைப்படி நிலுவைத் தொகை மொத்தமாக செலுத்தப்படுமா என்பது சந்தேகமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து அரசு இன்னும் உறுதியான முடிவெடுக்கவில்லை.

சலுகை விலையில் தங்கம்.. ஆன்லைனில் வாங்குவது எப்படி?
மறுபுறம், பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காகவும், நிலுவைத் தொகைக்காகவும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் அகவிலைப்படி நிலுவைத்தொகை இப்போது வெளியாகுமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் தகவல்படி இந்தியாவில் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் பென்சனர்களும் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்