ஆப்நகரம்

CPS ஒழிப்பு இயக்கத்தின் அடுத்த மூவ்.. மே 19ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்!

தமிழ்நாட்டில் சிபிஎஸ் திட்டத்தை ஒழிக்கக் கோரி மே 19ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 9 May 2023, 4:37 pm
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே. தற்போது நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) ஒழிக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியமான நோக்கமாகும். இதற்காகவே சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராடி வருகின்றனர்.
Samayam Tamil cps


சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு பழைய பென்சன் திட்டம் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மௌனம் காப்பது ஏன் என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுவும், தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போது ஏதேதோ காரணம் கூறுவது ஏன் எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

திமுகவின் சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதி எண் 309இன் படி CPS திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக் கொடை வழங்கக் கோரியும், CPS திட்டத்தில் பணிபுரிந்து இறந்த குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநில அளவில் உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் : 19.5.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை

இடம் :
திருச்சி

CPS திட்டத்தை ரத்து செய்திட தொடர்ந்து போராடுவோம், வீதியில் இறங்கி போராடமல்
வேதனை தீர வழியில்லை என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சிபிஎஸ் திட்டத்தை ஒழித்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்