ஆப்நகரம்

EPFO Pension: இனி அதிக பென்சன் கிடைக்கும்.. அரசு புதிய ஏற்பாடு!

பிஎஃப் உறுப்பினர்கள் அதிக பென்சன் வாங்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 21 Feb 2023, 10:38 am
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கும் பிஎஃப் திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகியது. தொழிலாளர் பென்சன் திட்டத்தில் அதிக பென்சன் பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


புதிய விதிமுறைகளின் படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் பிஎஃப் உறுப்பினர்களும் இணைந்து விண்ணப்பிக்கலாம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பிஎஃப் உறுப்பினர்கள் அதிக பென்சன் பெறும் வரையில் 2023 மார்ச் 3 வரை விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு ஏற்கெனவே இருந்த 6500 ரூபாயில் இருந்து (மாதத்துக்கு) 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், உறுப்பினர்களும் நிறுவனங்களும் தங்களது பங்களிப்பாக 8.33 சதவீதத்தை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யலாம். உறுப்பினர் மற்றும் நிறுவனங்கள் இணைந்து விண்ணப்பிக்கும் வசதியில் அதற்கான படிவம் மற்றும் அதற்கான இணைப்பு ஆகியவை விரைவில் வெளியிடப்படும் எனவும், அதற்கான வசதிகளும் உத்தரவுகளும் பிஎஃப் அலுவலகங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் சுற்றறிக்கையாகவும், பேனர், சுவரொட்டி போன்றவை மூலமாக பொது மக்களிடம் சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் போது அது டிஜிட்டல் முறையிலேயே பதிவு செய்யப்பட்டு, சரிபார்க்கப்பட்டு அதற்கான ரசீது எண்ணும் வழங்கப்படும் என்று பிஎஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல, விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், போஸ்ட் போன்றவற்றின் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!

முன்னதாக டிசம்பர் மாதம் 29ஆம் தேதி பிஎஃப் அமைப்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, பிஎஃப் திட்டத்தின் கீழ் அதிக சம்பள பங்களிப்பை வழங்கிய உறுப்பினர்கள் மட்டுமே அதிக பென்சன் பெறத் தகுதியானவர்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல, கடந்த 2014ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களும் இதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர். இந்நிலையில் தற்போது அதிக பென்சன் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தற்போது பிஎஃப் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நபர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அல்லது 2014 செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களும் இதில் பயன்பெறலாம். அவர்களின் வழக்கமான ஊதியம் மற்றும் தொழிலாளர் பென்சன் திட்டம் 1995-இன் படி இந்த உதவி கிடைக்கும். பிஎஃப் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவர்களது ஓய்வுக் காலத்தில் ஒரு பெரிய தொகையை பெறுவதோடு, 58 வயதை எட்டியதும் பென்சன் தொகையையும் பெறத் தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்