ஆப்நகரம்

பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுப்பது எப்படி?

பிறந்த குழந்தைக்கு ஆதார் எப்படி எடுப்பது எனவும், அதற்கு என்னென்ன தேவை எனவும் இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 3 Mar 2021, 3:29 pm
குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை UIDAI அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை ட்விட்டர் பதிவில் ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகளே மேற்கொள்கின்றன. ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் தேவை. குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும்.
Samayam Tamil aadhaar


பிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகைப் பதிவு எடுக்க முடியாது. 5 வயது தாண்டிய பின்னர் குழந்தையின் கைரேகையை அப்டேட் செய்துகொள்ளலாம். குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையப் பக்கத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அதற்கு https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்!
அந்த விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்துக்குச் சென்று ஆதார் எடுக்கலாம்.

தனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்