ஆப்நகரம்

ஆதார் கார்டில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாம போச்சே!!

ஆதார் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு நிறைய பயன்கள் கிடைக்கின்றன. அது என்ன என்று இங்கே பார்க்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 7 Jun 2023, 11:27 am
ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும். ஆதார் அடிப்படையிலான அடையாளத்தின் மூலம் நகல் மற்றும் போலி அடையாளங்களை அகற்றலாம். தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஆதார் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆதார் அட்டையில் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
Samayam Tamil aadhaar


பெயர்வுத்திறன்!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அந்த அடையாளத்தைப் பயன்படுத்தலாம். அவர்கள் இருக்கும் ஊரிலோ அல்லது மாநிலத்திலோ மட்டும்தான் ஆதார் செல்லுபடியாகும் என்று இல்லை. இந்தியா முழுவதும் அது அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மின்னணு பயன் பரிமாற்றம்!

அரசின் நலத்திட்ட உதவிகள் இப்போது மக்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அதற்கு ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். இதுபோன்ற நிறைய நலத்திட்ட உதவிகள் நேரடியாக வாடிக்கையாளர்களை சென்று சேர்வதற்கு ஆதார் உதவுகிறது.

பயனாளிகளுக்கு அங்கீகாரம்!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் அடையாளத்தை சரிபார்க்க விரும்பும் ஏஜென்சிகளுக்கு ஆன்லைன் அங்கீகாரச் சேவைகளை ஆதார் அமைப்பு (UIDAI) வழங்குகிறது. இதன் மூலம் உத்தேசிக்கப்பட்ட பயனாளியை உண்மையில் சென்றடையும் உரிமையை சரிபார்க்க உதவுகிறது.

வங்கிக் கடன்!

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மிக எளிதாக வங்கிக் கடன் பெற முடியும். வங்கிகள் கடன் வாங்க விண்ணப்பிக்கும்போது அடையாளச் சான்றாக ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. அதோடு பான் கார்டும் அவசியம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்