ஆப்நகரம்

ஆதார் அப்டேட்.. உடனடியாக இதை செஞ்சிருங்க.. இல்லன்னா பிரச்சினைதான்!

உடனடியாக மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

Samayam Tamil 15 Jan 2021, 3:32 pm
ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமென மத்திய அரசு நீண்டகாலமாக அறிவுறுத்தி வருகிறது. இதுவரை ஏராளமானோர் இணைத்திருந்தாலும், இன்னும் பலர் இணைக்காமல் இருக்கின்றனர். உடனடியாக ஆதார் கார்டு-மொபைல் எண்ணை இணைக்க வேண்டுமென தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil aadhaar card mobile number link dont forget this as covid vaccination drive is set to begin in india
ஆதார் அப்டேட்.. உடனடியாக இதை செஞ்சிருங்க.. இல்லன்னா பிரச்சினைதான்!


​கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. நாளை (ஜனவரி 16) முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய தளம்

தடுப்பூசி போடும் பணியின் ஒரு பகுதியாக, யாருக்கெல்லாம் தடுப்பூசி போடப்படும் என்பதை கண்டறிந்து, கண்காணிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக கோ-வின் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

​ஆதார் கட்டாயம்

யாருக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை கண்டறிய ஆதார் கார்டு பயன்படுத்தப்படும். இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும்போது சரிபார்க்க உதவியாக இருக்குமென ஆதார் பயன்படுத்தப்படுகிறது. முதல் தடுப்பூசி போட்டவுடன் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்.

மொபைல் எண்ணுடன் இணைப்பு

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின் அனைத்து முக்கிய தகவல்களும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கே தகவல்கள் வழங்கப்படும் என்பதால் உடனடியாக ஆதார்-மொபைல் எண்ணை இணைப்பது மிக முக்கியம்.

​எப்படி இணைப்பது?

ஆதாருடன் மொபைல் எண்ணை ஈசியாக ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம். இல்லாவிட்டால், அருகில் உள்ள ஆதார் கேந்திராவுக்கு சென்று இணைத்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்