ஆப்நகரம்

ஆதார் கார்டில் இதைச் செய்ய வேண்டும்.. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

மோசடி நடக்கலாம்.. உஷாரய்யா உஷாரு!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 25 Nov 2022, 1:00 pm
ஆதார் அட்டையை தனிநபரின் அடையாளமாக ஏற்பதற்கு முன்பு அதனை கட்டாயம் பரிசோதிக்கவேண்டும் என்று ஆதார் அமைப்பு எச்சரித்துள்ளது.
Samayam Tamil aadhaar card should be verified before accepting it alert from uidai
ஆதார் கார்டில் இதைச் செய்ய வேண்டும்.. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!


ஆதார் கார்டு!

ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இது அனைவரிடமுமே இருக்க வேண்டியது அவசியம். பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் எடுக்கும் வசதி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இந்த ஆதார் கார்டு மிக முக்கியமான அடையாளமாகும். 12 இலக்க எண்களைக் கொண்ட இந்த அட்டை ஒருவருக்கு ஒரு எண் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

​போலியாக இருக்கலாம்!

சிலர் போலியான ஆதார் கார்டை வைத்து மோசடி செய்வார்கள். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் கார்டு வைத்திருப்பார்கள். ஆதார் கார்டை வைத்து இதுபோன்ற நிறைய மோசடிகள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே நிறையப் பேருக்கு தங்களுடைய ஆதார் கார்டு போலியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். எனவே இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஆதார் அமைப்பு எச்சரித்துள்ளது.

​பரிசோதிப்பது அவசியம்!

ஆதார் அட்டையை எந்த வடிவில் வழங்கினாலும், அதை அடையாளமாக ஏற்பதற்கு முன்பு அதனை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை, இ-ஆதார், ஆதார் பிவிசி அட்டை மற்றும் எம் ஆதார் என எந்த வடிவில் ஆதார் அட்டை வழங்கப்பட்டாலும் அதன் உண்மை தன்மையை பரிசோதித்து உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

​மோசடி நடக்கலாம்!

சமூக விரோதிகள் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையை தவறுதலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் எண் என தனிநபர் வழங்கும் 12 இலக்க எண்ணை அப்படியே ஏற்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தனிநபரின் அடையாளமாக வழங்கப்படும் போது, அந்த எண்ணை பயன்படுத்துவதற்கு முன்பு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்து அறியவேண்டியது அவசியம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது.

​இதைச் செய்யலாம்!

எம்-ஆதார் செயலி, (M-Aadhaar -app) ஆதார் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் (Aadhaar OR code Scanner) ஆகியவற்றின் மூலம் ஆன்டராய்டு வசதியை பயன்படுத்தி தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆதார் கார்டில் இருக்கும் QR code சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் விவரங்களைக் கொண்டிருக்கும். அதை ஸ்கேன் செய்து பார்த்தாலே ஆதார் கார்டில் உண்மைத் தன்மை தெரிந்துவிடும்.

​எப்படி கண்டுபிடிப்பது?

வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள், அமைப்புகள் என யார் வேண்டுமானாலும் QR code மூலமாக ஆதாரின் உண்மைத்தன்மைத் தெரிந்துகொள்ளலாம். அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் உள்ள Aadhaar QR Scanner என்ற மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம் என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்