ஆப்நகரம்

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு திடீர் ஷாக்.. நெருங்கும் கடைசி தேதி!

ஆதார் - பான் கார்டு வைத்திருப்போர் இதைச் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்...

Samayam Tamil 17 Jan 2022, 11:35 am
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை மிக முக்கியமான ஆவணங்கள். அனைவருமே ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil Aadhaar Pan Link


ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என அரசு அறிவித்துள்ளது. கடைசி தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கு முன் ஆதார் - பான் இணைப்புக்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதியாக இருந்தது. பின்னர் மார்ச் 31ஆம் தேதி வரை கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்தது. ஆக, அபராதத்தை தவிர்க்க உடனடியாக ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும்.

Fixed Deposit வட்டி விகிதம் உயர்வு.. HDFC வங்கி அறிவிப்பு!
கடைசி தேதிக்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், அதன்பின் பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பான் கார்டு இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்கவோ, முதலீடு செய்யவோ முடியாது.

ஆதாருடன் பான் இணைப்பது எப்படி?

* வருமான வரி இணையதளத்துக்கு (https://incometax.gov.in/) செல்லவும்.

* அதில் உள்ள Link Aadhaar பகுதியை கிளிக் செய்யவும்.

* பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.

* உங்கள் மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிடவும்.

* Validate பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்