ஆப்நகரம்

ஸ்மார்ட்போன் இல்லாமலே ஆதார் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் 11% அதிகரிப்பு

ஆதாருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Samayam Tamil 12 Aug 2019, 4:30 pm
கடந்த ஜூலை மாதத்தில் ஆதார் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (AePS) 11 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது என இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil maxresdefault


இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் (National Payments Corporation of India) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் ஜூலை 2019ல் சுமார் 20.6 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் ஆதார் மூலம் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 11.35 சதவீதம் கூடுதலாகும். ஜூன் 2019ல் 18.5 கோடி பரிவரத்தனைகள் செய்யப்பட்டிருந்தன.

வீட்டுக்கடனை ரெபோ வட்டியுடன் இணைத்த பேங்க் ஆப் பரோடா


ஆதாருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை (Aadhaar enabled Payment System) 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதி மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள், மைக்ரோ ஏடிஎம்களில் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

அவசர பணத் தேவையா? 10 வழிகளில் கடன் பெறுவது எப்படி?

பணத்தை டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது, பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றுவது, இருப்புத் தொகையை (பேலன்ஸ்) அறிந்துகொள்வது ஆகிய வசதிகளில் இதில் உள்ளன.


உச்சநீதிமன்றம் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை தடை செய்ததால், கடந்த ஆண்டின் பிற்பாதியில் ஆதாருடன் இணைந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை. பின் அக்டோபரில் வங்கிகள் தொடர்ந்து ஆதார் மூலம் பணப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியது.

ஆர்பிஐ-க்கு தேங்ஸ் சொல்லுங்க! எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி குறைகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்