ஆப்நகரம்

இவர்களுக்கெல்லாம் ஆதார் அட்டை அவசியம் இல்லையாம் : மத்திய அரசு

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு , ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநில மக்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 14 May 2017, 5:41 am
டெல்லி : 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு , ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநில மக்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil aadhaar not required for pan link filing itr heres who is exempted
இவர்களுக்கெல்லாம் ஆதார் அட்டை அவசியம் இல்லையாம் : மத்திய அரசு


இந்திய குடிமகன்கள் அனைவரும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. ஆதார் அட்டையை மக்களிடம் தேவையில்லாமல் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறிய போதிலும் , மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கியது.
ஆதார் அட்டை சில பிரிவினருக்கு அவசியம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநில மக்களுக்கு முழுமையாக ஆதார் அட்டை பொருந்தாது எனவும் புதிய உத்தரவு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Aadhaar not required for PAN link, filing ITR: Here’s who is exempted

அடுத்த செய்தி

டிரெண்டிங்