ஆப்நகரம்

ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயம் இல்லை.. இவர்களுக்கு மட்டும்!

குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை. உங்களுக்கு கட்டாயமா என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 23 Mar 2023, 6:07 pm
இந்தியர்கள் அனைவருமே ஆதார் - பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச் 31ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil aadhaar pan link
aadhaar pan link


ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கு 1000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் - பான் கார்டுகளை இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டு செயலிழந்துவிட்டால் வங்கி சேவைகளையோ, முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த பரிவர்த்தனைகளையோ மேற்கொள்ள முடியாது. எனவே, மார்ச் 31ஆம் தேதிக்குள் தவறாமல் ஆதார் - பான் கார்டு இணைக்கும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இந்திய குடிமக்கள் ஆதார் - பான் கார்டுகளை கட்டாயமாக இணைக்க வேண்டும். எனினும், சிலர் மட்டும் ஆதார் - பான் கார்டு கட்டாயமாக இணைக்க தேவையில்லை என மத்திய அரசு விலக்கு அளித்திருக்கிறது. அதன்படி, யாரெல்லாம் ஆதார் - பான் கார்டு இணைக்க தேவையில்லை என்பதை பார்க்கலாம்.

  • அசாம், மேகாலயா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள்.

  • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI).

  • 80 வயதை தாண்டிய சீனியர் சிட்டிசன்கள்.

  • இந்திய குடிமக்கள் அல்லாமல் இந்தியாவில் வசிக்கும் நபர்கள்.

இவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை. மற்ற அனைத்து இந்திய குடிமக்களுமே கட்டாயமாக ஆதார் பான் கார்டு இணைக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்