ஆப்நகரம்

Layoffs: 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்!

ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Jul 2022, 2:46 pm
ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறை சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil jobloss


கோரோனா ஊரடங்கு காலத்தின்போது பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வேகவேகமாக வளர்ந்தன. தொழில் விருத்தியால் விரிவாக்கம், நிறைய ஊழியர்களை பணியமர்த்துவது என படு வேகமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், அண்மைக்காலமாக பொருளாதார மந்தநிலையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஐடி நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்து வருகின்றன. இதுகுறித்து Crunchbase நிறுவனம் சர்வே நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் 12,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Miyazaki Mango: உலகிலேயே காஸ்ட்லியான மாம்பழம்.. திருடர்கள் தொல்லையால் செக்யூரிட்டி போட்ட விவசாயி!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினமாகியுள்ளதாலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பீடு குறைந்து வருவதாலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக ‘மறுசீரமைப்பு’ மற்றும் ‘செலவுகள் குறைப்பு’ என்ற பெயரில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஓலா, அனகாடமி, வேதாந்து, கார்ஸ்24, எம்பிஎல் உள்ளிட்ட யுனிகார்ன் நிறுவனங்கள் கூட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. குறிப்பாக, கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிறைய ஊழியர்களை வெளியேற்றியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 60,000 ஊழியர்களை இழக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் இதே நிலை உருவாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், டெஸ்லா, ராபின்ஹூட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்