ஆப்நகரம்

PF வட்டி உயருமா? காத்திருக்கும் ஊழியர்கள்! அடுத்த மாதம் ரிசல்ட்!

பிஎஃப் உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் அடுத்த மாதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 14 Feb 2022, 5:03 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பின் சுமார் 24 கோடி கணக்குதாரர்களுக்கு இந்திய அரசு விரைவில் நல்ல செய்தி ஒன்றை வெளியிட உள்ளது. பிஎஃப் வட்டி உயர்வு தொடர்பான அறிவிப்புதான் அது. 2021-22 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதம் வருகிற மார்ச் மாதம் முடிவு செய்யப்படும். அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இது குறித்த முடிவை மத்திய அறங்காவலர் குழு (CBT) எடுத்துள்ளது.
Samayam Tamil pf


அடுத்த மாதம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதங்கள் குறித்து முடிவு செய்யப்படும். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இதுகுறித்துக் கூறுகையில், 'பிஎஃப் அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. அதில் 2021-22 நிதியாண்டுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்படும்” என்றார்.

PF பணம்: வங்கிக் கணக்கை அப்டேட் செய்வது எப்படி?
2020-21 நிதியாண்டைப் போலவே 2021-22 நிதியாண்டுக்கான வட்டி 8.5 சதவீதத்திலேயே வைக்கப்படுமா அல்லது மேலும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்கள் உள்ளனர். ஏனெனில் 2019-20 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

2018-19 நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி

2017-18 நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி

2016-17 நிதியாண்டில் 8.65 சதவீத வட்டி

2015-16 நிதியாண்டில் 8.8 சதவீத வட்டி

2014-15 நிதியாண்டில் 8.75 சதவீத வட்டி

2013-14 நிதியாண்டில் 8.75 சதவீத வட்டி

2012-13 நிதியாண்டில் 8.5 சதவீத வட்டி

2011-12 நிதியாண்டில் 8.25 சதவீத வட்டி

மேலே உள்ள பட்டியலைப் பார்க்கும்போது கடந்த 10 ஆண்டுகளில் பிஎஃப் வட்டி விகிதம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்