ஆப்நகரம்

தொழில் கடன்.. அடேங்கப்பா 6 லட்சம் கோடியா!

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்.

Samayam Tamil 22 Jul 2021, 6:22 pm

ஹைலைட்ஸ்:

  • தொழில் தொடங்குவோருக்கு முத்ரா கடன்
  • மூன்று நிதியாண்டுகளில் 6.41 லட்சம் கோடி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil cash
தொழில் செய்ய விரும்புவோருக்கு கடன் வழங்குவதற்காக பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் சாராத சிறு, குறு தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் முத்ரா கடன்கள் வழங்கப்படுகின்றன. முத்ரா கடன் பெற விரும்புவோர் www.udayamimitra.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது நேரடியாக வங்கிகளை அணுகி விண்ணப்பிக்கலாம்.

2015ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதுவரை 30 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 15.97 லட்சம் கோடி ரூபாய். இந்நிலையில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கம்மி விலையில் சொத்து வாங்கலாம்.. சூப்பர் சான்ஸ்!
இதுகுறித்து நிதித் துறை இணையமைச்சர் பகவத் கிசான்ராவ் ராஜ்ய சபாவில் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 2019ஆம் நிதியாண்டு முதல் 2021ஆம் நிதியாண்டு வரை 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முத்ரா கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்