ஆப்நகரம்

Accenture Layoffs:அக்சென்ச்சர் பணிநீக்கம்.. இந்தியாவில் முதலில் இவர்களுக்குதான் வேலை போகும்!

அக்சென்ச்சர் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிகையால் இந்தியாவில் முதலில் யாருக்கு வேலை பறிபோகும்?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 31 Mar 2023, 3:54 pm
அக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் ஆட்குறைப்பு (Layoff) நடவடிக்கையின் கீழ் எந்தெந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்பது குறித்த பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil accenture
accenture


அக்சென்ச்சர் உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. இதன்படி, தனது மொத்த ஊழியர்களில் 2.5% பேரை பணிநீக்கம் செய்ய அக்சென்ச்சர் முடிவு செய்துள்ளது.

பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் நீடித்து வரும் சூழலில் செலவுகளை குறைப்பதற்காக கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அமேசான் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன.

இந்த வரிசையில் அக்சென்ச்சர் நிறுவனமும் 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, நொய்டா போன்ற நகரங்களில் அக்சென்ச்சர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

உலகம் முழுவதும் அக்சென்ச்சர் நிறுவனத்தில் சுமார் 7.40 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 40% ஊழியர்கள் இந்தியாவில் பணிபுரிகின்றனர். அதாவது ஏறத்தாழ 3 லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.

அக்சென்ச்சர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் 7000 முதல் 7500 பேருக்கு வேலை பறிபோகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையொல், இந்தியாவில் யாரை எல்லாம் பணிநீக்கம் செய்யலாம் என்பது குறித்து HR துறை பட்டியல் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு புராஜெக்ட்டிலும் (Project) நியமிக்கப்படாமல் இருக்கும் ஊழியர்களின் பட்டியலை முதற்கட்டமாக அக்சென்ச்சர் நிறுவனத்தின் HR துறை தயார் செய்து வருகிறது. முதற்கட்டமாக இவர்கள்தான் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இவர்களை பணிநீக்கம் செய்தபின் அடுத்தகட்டமாக யாரை பணிநீக்கம் செய்வது என்பது குறித்த பட்டியலை அக்சென்ச்சர் நிறுவனத்தின் HR துறை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்