ஆப்நகரம்

அதானியின் கடன்கள் இருமடங்கு உயர்வு.. அடுத்தடுத்து வரப்போகும் சுமை!

கடந்த நான்கு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன் சுமை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Mar 2023, 12:56 pm
அதானி குழுமம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், அதானி குழுமத்தின் கடன்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கடன்கள் டாலர் பத்திரங்களின் வடிவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil gautam adani
gautam adani


அதானி குழுமம் தனது முதலீட்டாளர்களிடம் அண்மையில் வெளியிட்ட விவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் அதானி குழுமம் திருப்பிச் செலுத்த வேண்டிய 200 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் இருக்கின்றன. மேலும், 4 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன் இருமடங்கு உயர்ந்துள்ளது.

அதானி குழுமம் 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 10 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை டாலர் பத்திரங்கள் வாயிலாக பெற்றது. இதில் 1.15 பில்லியன் டாலர் கடன் பத்திரங்கள் 2022ஆம் ஆண்டுக்குள் முதிர்வடைந்துவிட்டன. 2023ஆம் ஆண்டில் முதிர்வடையும் பத்திரங்கள் ஏதும் இல்லை.

இதையடுத்து 2024ஆம் ஆண்டில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான அதானி கடன் பத்திரங்கள் முதிர்வடைய இருக்கின்றன. இதில் அதானி போர்ட்ஸ் வாங்கிய 650 மில்லியன் டாலர் கடன், அதானி கிரீன் எனர்ஜி வாங்கிய 750 மில்லியன் டாலர் கடன் மற்றும் 500 மில்லியன் டாலர் கடன் என மொத்தம் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் முதிர்வடைகின்றன.

ஆக, 2024ஆம் ஆண்டில் அதானி குழுமத்துக்கு பெரும் கடன் சுமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் 2025ஆம் ஆண்டில் முதிர்வடையும் டாலர் பத்திரங்கள் ஏதும் அதானிக்கு இல்லை. எனினும், 2026ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்கள் முதிர்வடைய இருக்கின்றன.

ஏற்கெனவே ஹிண்டென்பர்க் அறிக்கை ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதனால் அதானி பங்குகள் கடுமையாக சரிந்துவிட்டன. அதானிக்கு நிறைய கடன்கள் இருப்பதே முக்கிய விமர்சனமாக வைக்கப்படுகிறது.

இதையடுத்து சில கடன்களை அடைக்க அதானி முயற்சித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற அதானி குழுமம் சிங்கப்பூரிலும், ஹாங் காங்கிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்