ஆப்நகரம்

பேடிஎம் பயனர்களுக்கு கெட்ட செய்தி!

கிரெடிட் கார்டு மூலமாக பணம் ஏற்றும் சேவை அனைத்துக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று பேடிஎம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Oct 2020, 6:56 pm
இந்தியாவில் 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு ஆன்லைன் பரிவர்த்தனைகளும், மொபைல் ஆப் பயன்பாடும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணம் அனுப்பவும், கட்டணங்கள் செலுத்தவும் இப்போதெல்லாம் மக்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக பேடிஎம் உள்ளிட்ட சில செயலிகளில் மட்டும்தான் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்து வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதி உள்ளது. எனவே பேடிஎம் போன்ற செயலிகள் இன்னும் அதிகப் பயன்பாட்டைக் கொண்டுள்ளன.
Samayam Tamil paytm


இந்நிலையில், கிரெடிட் கார்டுகளில் இருந்து பணத்தை எடுத்துப் பயன்படுத்தும் சேவைக்கு இனி 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையின்படி, கிரெடிட் கார்டிலிருந்து ஒரு மாதத்தில் ரூ.10,000க்கு மேல் பணம் எடுத்தால் மட்டுமே 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி எவ்வளவு பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும். பேடிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இவ்வாறு பணம் அனுப்பும்போது அவர்களுக்கு இந்தக் கட்டண வசூல் குறித்த செய்திக் குறிப்பு செயலியிலேயே தெரிவிக்கப்படும்.

ஏடிஎம்: 5000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம்!

நாம் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்கும்போது அதற்காக பேடிஎம் சார்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்கோ அல்லது கட்டண நெட்வொர்க்குக்கோ குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். இதன் சுமை இனி வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படும். இது மட்டுமல்லாமல் பேடிஎம் நிறுவனம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கிரெடிட் கார்டிலிருந்து குறைந்தபட்சம் 50 ரூபாய் பணம் எடுத்தால் 2 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கேஷ்பேக் ரூ.200ஐத் தாண்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்