ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! பணம் காணாமல் போகலாம்!

கேஒய்சி விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

Samayam Tamil 5 Feb 2021, 3:36 pm
மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இப்போதெல்லாம் அதிக அழைப்புகள் வருகின்றன. வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறி நம்மிடம் வங்கிக் கணக்கு விவரங்களையும் ஓடிபி எண், பின் நம்பரை திருடும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இதனால் நமக்குத் தெரியாமலே வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போவதுண்டு. ஏடிஎம் எந்திரங்களில் நமது பின் நம்பரைத் திருடி பணத்தை எடுப்பதும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து வங்கிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்தாலும் இந்த மோசடிகள் குறைந்தபாடில்லை.
Samayam Tamil sbi


இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 40 கோடி வாடிக்கையாளர்களுக்கு KYC(வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை) தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது கேஒய்சி விவரங்களைத் தவறான நபர்களிடம் வழங்கிவிட வேண்டாம் என்று விழிப்புணர்வு கொடுத்துள்ளது. கேஒய்சி விவரத்தை வழங்குவதாக இருந்தால் அந்த நபரின் அடையாளம், அவர் உண்மையில் வங்கி அதிகாரிதானா என்று பார்த்துவிட்டு வழங்கும்படி தெரிவித்துள்ளது.

ரூ.60,000 பென்சன் வேணுமா? 60 ரூபாய் இருந்தால் போதும்!

பொதுவாகவே கேஒய்சி விவரங்கள் போன் அழைப்பு மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ கேட்கப்படுவதில்லை. வங்கிக் கிளைக்கு நேரடியாகச் செல்லும்போது கேட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில நேரங்களில் வீடுகளுக்கே வந்து கேஒய்சி சரிபார்ப்பு செய்வதாக மோசடி செய்கின்றனர். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது. இவ்வாறு முறைகேடு ஏதேனும் நடைபெறுவதாக சந்தேகித்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக காவல் துறையில் புகாரளிக்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.


புது போன் வாங்கப் போறீங்களா? அமேசானின் அட்டகாசமான ஆஃபர்!

கடன் வழங்குவதாகக் கூறியே கேஒய்சி சரிபார்ப்புக்கு இந்த மாதிரியான மோசடிகள் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களும் உடனடியாகக் கடன் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுத்துவிடுகின்றனர். ஆவணத்தைக் கொடுக்கும்போது அந்த நபரின் அடையாளம் பற்றித் தெரிந்துகொள்ள வழங்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்